Tuesday, August 4, 2009

இருண்டகாலம்

காக்காமுட்களைக் கடந்தவனை
ஒவ்வொரு நொடியிலும்
கைகடிகாரமுட்கள் குத்திக்
கையைப் பதம்பார்க்கின்றன

பௌணர்மி

இவள் நடந்தாலே
எங்கும்
முத்துக்கள் தெறிக்கின்றன
யாரது துணிவிரித்து அள்ள
முயலுவது முகில்களோ
ராக்கெட்டுக்களை வீசுவது
வால்மீன்களோ
மெல்ல மெல்ல நடை பயிலுவதைப்
பார்த்து இடி ஆனந்தக் கூச்சலிடுகின்றதோ
யார் திருஷ்டிப்பட்டதோ
இவள் கன்னத்தில் கரும்படலம் !!

Reynoulds changed என் அன்னை as

நகவெட்டிகள் தூங்குகின்றன
நகங்களைக் காணோம்
விரல்நுனிகள் அவிந்ததால்
ஆக்குவதை அறுதியிட இயலவில்லை
கடிக்க காலணியிருந்தும்
விரல்கள் ஒத்துழைக்கவில்லை
ஊட்டிய விரல்களில்
ஊனைக் காணோம்
ஓடிஓடி உழைத்தவளுக்கு
வலி ஓய்வளிக்கவில்லை
தவறிய சில்லறையை எடுக்க
குனிந்தவளுக்கு எடுத்துக் கொடுக்க
பூமித்தாய்க்கும் விரல்கள் இல்லையோ
இவள்
சில்வர்ஸ்பூனுடன் பிறக்கவில்லை
சில்வர்ஸ்பூன் பிறந்ததே இவளுக்குத்தான்!